திருப்பூர் : தீபாவளி பண்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் : தீபாவளி பண்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(42). இவர் அதே பகுதியில் கடந்த 5 வருட காலமாக வானவில் சிறுசேமிப்பு என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக வாரம் வாரமாக பணம் கட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில், எப்போதும் தீபாவளிக்கு முன்னதாக கட்டிய பணத்தை மொத்தமாக திருப்பிக்கொடுக்கும் நிலையில், இந்தாண்டு பணத்தை திருப்பித்தராமல் கடந்த இரண்டு தினங்களாக தலைமறைவாகி விட்டதாகவும், அவரது தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் பணத்தை மோசடி செய்து தலைமறைவாகிய மகேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(42). இவர் அதே பகுதியில் கடந்த 5 வருட காலமாக வானவில் சிறுசேமிப்பு என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக வாரம் வாரமாக பணம் கட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில், எப்போதும் தீபாவளிக்கு முன்னதாக கட்டிய பணத்தை மொத்தமாக திருப்பிக்கொடுக்கும் நிலையில், இந்தாண்டு பணத்தை திருப்பித்தராமல் கடந்த இரண்டு தினங்களாக தலைமறைவாகி விட்டதாகவும், அவரது தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் பணத்தை மோசடி செய்து தலைமறைவாகிய மகேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.