திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 82 ஆயிரத்து ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 82 ஆயிரத்து ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆறு பேர் கொண்ட குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அலுவலகம் மட்டுமல்லாது அலுவலர்களின் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் உட்பட 82 ஆயிரத்து 875 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், தீபாவளி அன்பளிப்பாக அதிகாரிகள் பணமாகவோ, பொருளாகவோ பெறலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.