இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : பிலால் ஹாஜியாரை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது

கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தண்டணை பெற்று நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அப்துல் ஹமீது என்கிற பிலால் ஹாஜியாரை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தண்டணை பெற்று நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அப்துல் ஹமீது என்கிற பிலால் ஹாஜியாரை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.



கோவையில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த வீரசிவா என்பவரின் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர் அப்துல்ஹமீது (எ) பிலால் ஹாஜியார். சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் 86 வயதான பிலால் ஹாஜியாரை கோவை மத்திய சிறையில் இருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பிலால் ஹாஜியாரை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை அவரை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிலால் ஹாஜியாரை விடுவிக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் ஏராளமான போலீசார் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், சடலங்களைப் போல படுத்துக் கொண்டு நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவினை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த மறுப்பதாகவும், உடனடியாக பிலால் ஹாஜியாரை விடுவிக்க வேண்டும் எனவும்,அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.



இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால், ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....