இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கர்நாடகா, புதுச்சேரி அரசுகளைப் போல தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கர்நாடகா, புதுச்சேரி அரசுகளைப் போல தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சட்டம் பயின்று புதிய இளம் வழக்கறிஞர்களாக தொழிலுக்கு வருவதாகவும் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின் தங்கிய பகுதியிலிருந்து வருவதால் வழக்கறிஞர் தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட குறைந்தபட்ச உத்தரவாத வருமானம் 5000 வழங்கிட அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகா அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும், புதுச்சேரி அரசு 3000 ரூபாயும் வழங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், இது மேலும் அதிகரிக்கப்பட்டு ஐந்தாயிரமாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளதாக கூறினர்.

மேலும், கேரளா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் இளம் வழக்கறிஞர்களுக்கு ஐயாயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...