வாடிக்கையாளருக்கு சேவை வழங்க ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி யோசனை

மும்பை: ஏடிஎம் பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி சர்வே எடுத்துள்ளது. இதில், ஆசியாவில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. மொபைல் பேங்கிங் பயன்படுத்துதிலும் இந்தியர்கள்தான் முதலிடம். சர்வே எடுத்ததில் பாதிப்பேர், வாரத்தி்ல் ஒரு முறையாவது ஏடிஎம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இந்த பயன்பாடு 26 சதவீதமாகவும், சீனாவில் 44 சதவீதமாகவும் உள்ளது. 

இதுபோல் மொபைல் பேங்கிங் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் ஏடிஎம் மட்டுமின்றி வங்கி கிளைக்கு செல்வதிலும் அதிக அளவில் உள்ளனர். எனவே இந்தியாவில் ஏடிஎம்க்கு எப்போதுமே தேவை உள்ளது. கடந்த ஜூலையில் 75 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே மாதத்தில் 6.5 கோடி மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போது ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்படுகிறார். இத்துடன் கூடுதலாக ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி சேவைக்கான ஒரு நபர் தனியாக நியமிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதன்மூலம், வங்கி கிளையில் பெறக்கூடிய கூடுதல் சேவைகளை ஏடிஎம் மூலாமாகவே பெறவும், வங்கி வர்த்தகத்தை விரிவு படுத்தவும் இது உதவும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...