சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகளின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது. மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினர் நல விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நலத்திட்ட சலுகைகளை பயன்படுத்தி தகுதியுடைய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...