சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகளின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது. மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினர் நல விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நலத்திட்ட சலுகைகளை பயன்படுத்தி தகுதியுடைய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...