ஜெயலலிதா உடல்நலம் விசாரிக்க சென்னை வந்த அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு வெளிநாட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு புதனன்று (இன்று) வருகைத் தந்தனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இதற்காக அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.



இதனிடையே, அப்பல்லோவில் 20 நிமிடம் இருந்த அருண் ஜெட்லியும், அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...