பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் திட்டம்

சார்க் கூட்டமைப்பில் இந்தியாவால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஈரானை சேர்த்து, மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக, வங்கதேசம், பூடான், ஆப்கன் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனையடுத்து மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சார்க் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கு போட்டியாக தெற்காசிய அளவில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைத்து பெரிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் குழுவினர் கூறுகையில், மிகப்பெரிய தெற்காசிய அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகள் இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும். சீனாவுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகளுக்கும் குவாடர் துறைமுகம் எளிதாக அணுகுவதாக இருக்கும். இந்த அமைப்பில் இந்தியா இணைய வேண்டும் எனக்கூறினார்

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...