கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிசம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிசம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக காவல் துறை இயக்குநரின் உத்தரவுப்படி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 நபர்கள் 7(1)(A) CLA- act-ன் படி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 11 நபர்கள் கு.வி.மு.ச பிரிவு 109-ன் கீழும், 47 நபர்கள் கு.வி.மு.ச பிரிவு 110-இன் கீழும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.