கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு நேருநகர் பகுதியில், பூட்டிய வீட்டின் கதவில் இருந்த சாவியை ஜன்னல் வழியாக எடுத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




நேருநகரைச் சேர்ந்த குப்புசாமி (62), தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் உள்பக்க கதவை பூட்டிவிட்டு, சாவியை கதவிலேயே வைத்துவிட்டு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது.




நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கதவின் அருகிலிருந்த ஜன்னல் வழியாக கையை நீட்டி சாவியை எடுத்து, அதன்மூலம் கதவை திறந்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.




இன்று அதிகாலை எழுந்த வீட்டில் உள்ளவர்கள், பீரோ திறந்து கிடந்ததையும், நகைகள் திருடப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்து, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.




முதற்கட்ட விசாரணையில், கதவில் இருந்த சாவியை பயன்படுத்தியே மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...