கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு நேருநகர் பகுதியில், பூட்டிய வீட்டின் கதவில் இருந்த சாவியை ஜன்னல் வழியாக எடுத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




நேருநகரைச் சேர்ந்த குப்புசாமி (62), தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் உள்பக்க கதவை பூட்டிவிட்டு, சாவியை கதவிலேயே வைத்துவிட்டு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது.




நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கதவின் அருகிலிருந்த ஜன்னல் வழியாக கையை நீட்டி சாவியை எடுத்து, அதன்மூலம் கதவை திறந்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.




இன்று அதிகாலை எழுந்த வீட்டில் உள்ளவர்கள், பீரோ திறந்து கிடந்ததையும், நகைகள் திருடப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்து, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.




முதற்கட்ட விசாரணையில், கதவில் இருந்த சாவியை பயன்படுத்தியே மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...