கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து சரிந்ததையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000-ம் கன அடியாக குறைந்துள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து சரிந்ததையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000-ம் கன அடியாக குறைந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நேற்று தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை தண்ணீர் எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே விநாடிக்கு சுமார் 18,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதனால், பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று இரவு வரை அணைக்கான நீர்வரத்து 16,0000 கன அடியாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை குறைந்ததால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக, அணையின் நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, மின் தேவைக்காக 6,500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை தொடர்வதால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் நீரோட்டம் சற்று குறைந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நேற்று தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை தண்ணீர் எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே விநாடிக்கு சுமார் 18,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதனால், பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று இரவு வரை அணைக்கான நீர்வரத்து 16,0000 கன அடியாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை குறைந்ததால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக, அணையின் நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, மின் தேவைக்காக 6,500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை தொடர்வதால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் நீரோட்டம் சற்று குறைந்துள்ளது.