கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா தரமற்ற மருத்துவர்களை உருவாக்கும் எனவும், மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தேவையற்றது எனவும் கூறிய மருத்துவ மாணவர்கள், அவற்றை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.