கோவை : தடகாம் வனப் பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சுயம்பு என்ற யானை, கும்கியாக மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை : தடகாம் வனப் பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சுயம்பு என்ற யானை, கும்கியாக மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தடாகம் வனப்பகுதியில் 8 வயது இருக்கும் போது வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது சுயம்பு என்கிற யானை. பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்கியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த ஊரான கோவையில் நிகழும் மனித - யானை மோதலை தடுப்பதற்காக சுயம்பு கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளான். சாடிவயல் யானைகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுயம்புவுடன் பணியாற்ற, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெங்கடேசன் என்கிற மற்றொரு கும்கி விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு சுயம்பு மற்றும் வெங்கடேசன் ஆகிய கும்கிகள், நிகழும் மனித - யானை மோதலை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து சின்னத்தம்பியை பிடித்தது கும்கியாக சுயம்புவுக்கு முதல் பணியாகும். அதிலும், உடுமலைப்ப்பேட்டையில் தனி ஒருவனாக இருந்து சின்னத்தம்பியை லாரியில் ஏற்றிய சுயம்புவின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தடாகம் வனப்பகுதியில் 8 வயது இருக்கும் போது வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது சுயம்பு என்கிற யானை. பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்கியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த ஊரான கோவையில் நிகழும் மனித - யானை மோதலை தடுப்பதற்காக சுயம்பு கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளான். சாடிவயல் யானைகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுயம்புவுடன் பணியாற்ற, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெங்கடேசன் என்கிற மற்றொரு கும்கி விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு சுயம்பு மற்றும் வெங்கடேசன் ஆகிய கும்கிகள், நிகழும் மனித - யானை மோதலை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து சின்னத்தம்பியை பிடித்தது கும்கியாக சுயம்புவுக்கு முதல் பணியாகும். அதிலும், உடுமலைப்ப்பேட்டையில் தனி ஒருவனாக இருந்து சின்னத்தம்பியை லாரியில் ஏற்றிய சுயம்புவின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.