மேட்டுப்பாளையத்தில் மினி வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 13 பெண்கள் படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் நிறுவன மினி வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 13 பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தனியார் நிறுவன மினி வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 13 பெண்கள் படுகாயமடைந்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சின்னமத்தம்பாளையத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் மினி வேன் ஒன்று நேற்று ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நின்று கொண்டிருந்தது. மினிவேனை காரமடை மத்தம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் வாசன் இயக்கி வந்தார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இவரின் மினிவேன் மீது பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், நிலைதடுமாறிய மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த பெண் ஊழியர்கள் 13 பேர் படுகாயமடைந்தனர். 



இதனைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கிய 13 பேரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், சரஸ்வதி மற்றும் லலிதாமணி ஆகிய இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...