நீலகிரி : குன்னூர் அருகே முப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் காட்டுயானைகள் முற்றுகையிட்டு இருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : குன்னூர் அருகே முப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் காட்டுயானைகள் முற்றுகையிட்டு இருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த சில தினங்களாக பெய்த மழையால் உணவு, குடிநீரைத் தேடி வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை, பரளிக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், மூப்பர்காடு கிராமத்தை நோக்கி படையெடுத்து வரத் துவங்கி உள்ளன. இந்த நிலையில், குட்டியுடன் கூடிய காட்டுயானைகள் மூப்பர்காடு பழங்குடியின கிராமத்தை பலாப்பழத்திற்காக முற்றுகையிட்டுள்ளன. இதனால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

மேலும், வனத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைப்பதிலும் அச்சத்துடனேயே செயல்பட வேண்டியுள்ளது. இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இங்கு வசித்து வரும் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமலும், கிராம மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமலும், வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடிக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு, பழனியப்பா எஸ்டேட் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த சில தினங்களாக பெய்த மழையால் உணவு, குடிநீரைத் தேடி வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை, பரளிக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், மூப்பர்காடு கிராமத்தை நோக்கி படையெடுத்து வரத் துவங்கி உள்ளன. இந்த நிலையில், குட்டியுடன் கூடிய காட்டுயானைகள் மூப்பர்காடு பழங்குடியின கிராமத்தை பலாப்பழத்திற்காக முற்றுகையிட்டுள்ளன. இதனால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

மேலும், வனத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைப்பதிலும் அச்சத்துடனேயே செயல்பட வேண்டியுள்ளது. இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இங்கு வசித்து வரும் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமலும், கிராம மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமலும், வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடிக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.