உ.பி.யில் இஸ்லாமிய சிறுவன் எரித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை ரயில்நிலையம் முற்றுகை : போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு

கோவை : உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஹாலித் அன்சாரியை எரித்து படுகொலை செய்தவர்களைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


கோவை : உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஹாலித் அன்சாரியை எரித்து படுகொலை செய்தவர்களைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கம் எழுப்பக்கோரி உத்திர பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஹாலித் அன்சாரியை எரித்து படுகொலை செய்தவர்களைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 



அப்போது, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மாட்டின் பெயராலும், மதத்தின் பெயராலும் இஸ்லாமிய இளைஞர்கள் அடித்து கொல்லப்படுவதும் அதிகரித்து வருவதாகவும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பக் கோரி அச்சிறுவனை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...