பல்லடம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து : : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர் : பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் : பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. 



திருப்பூர் அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர் பழைய சாக்குப் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை பரமசிவனுக்கு சொந்தமான குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் காவல்நிலையம் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வாகனமும் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...