கோவையில் வங்கியின் முன்பு தற்கொலை செய்த விவசாயியின் உடலுக்கு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை ?

கோவை : கோவையில் வங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.


கோவை : கோவையில் வங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கிய கூட்டு தொழில் நஷ்டமடைந்த நிலையில், வங்கிக் கடனில் தனது பங்கு தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், எனவே, தனது அடமானப் பத்திரங்களை மட்டும் விடுவிக்கும்படி பூபதி (எ) மகேஷ்வரன் என்ற விவசாயி வெரைட்டி ஹாலில் உள்ள இந்தியன் வங்கியில் முறையிட்டார். ஆனால், மொத்தத் தொகை செலுத்தினால் மட்டுமே பத்திரங்களை விடுவிக்க முடியும் என வங்கி மேலாளர் கூறினார். இதனால், மனமுடைந்த பூபதி, சுமார் 10 மணி அளவில் இந்தியன் வங்கியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சுமார் 11 மணியளவில் அவரது உடலை வங்கியில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு,மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சிலேயே உடல் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுமார் 3 மணியளவில் பூபதியின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பிரேத கிடங்கிற்கு அனுப்பினர். அங்கு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது பின்னர், 5.15 மணியளவில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழக்கத்துக்கு மாறாக போலீசாரின் தீவிர முயற்சியினால் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, ஊடகங்களுக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிய நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...