திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் ரூ. 500 மொய் வசூல் : மாதர் சங்கத்தினர் அறிக்கை சமர்பிப்பு

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் குழந்தைகள் பிறந்தால் 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தினர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் குழந்தைகள் பிறந்தால் 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தினர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் ஊரகப் பகுதியைச் சேர்ந்த உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றைத் தயாரித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.



அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மருத்துவமனையில் மருத்துவம் நன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை அணுகும் முறை கடுமையாக உள்ளது. செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் பார்வையாளர்களை தரக்குறைவாக பேசுகின்றனர். குழந்தைகள் வார்டில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காயங்களுக்கு கட்டுபோடும் இடத்திலும், பணம் தர வேண்டிய நிலை உள்ளது. பிரசவ வார்டில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 500 வரை பணம் பெறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போதும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. இதையெல்லாம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...