கோவை : வெள்ளலூர் பகுதியில் ரூ. 178.26 கோடி செலவில் கட்டப்படும் பேருந்து நிலையப் பணிகளுக்கான செயலாக்க ஆய்வை கோவை மாநகராட்சி மேற்கொண்டது.
கோவை : வெள்ளலூர் பகுதியில் ரூ. 178.26 கோடி செலவில் கட்டப்படும் பேருந்து நிலையப் பணிகளுக்கான செயலாக்க ஆய்வை கோவை மாநகராட்சி மேற்கொண்டது.
வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில் ரூ. 178.26 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11-ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான செயலாக்க ஆய்வு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் கூறியதாவது :- பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக மாநில நிதித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில், மாநகராட்சி மற்றும் மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். உள்ளாட்சி அமைப்பு செயலாக்க ஆய்வுப் பணிகளை தொடங்கி விட்டது. இன்னும் இரு வாரங்களுக்குள் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து விடும். கடந்த 2015-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு நகர இயக்கத் திட்டங்களை கோவை மாநகராட்சி வகுத்துவிட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்போது இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான செயலாக்க ஆய்வுகளை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதோடு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.ஐ.டி.இ.எஸ்.உடன் சேர்ந்து இரு நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது," என்றார்.
வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில் ரூ. 178.26 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11-ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான செயலாக்க ஆய்வு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் கூறியதாவது :- பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக மாநில நிதித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில், மாநகராட்சி மற்றும் மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். உள்ளாட்சி அமைப்பு செயலாக்க ஆய்வுப் பணிகளை தொடங்கி விட்டது. இன்னும் இரு வாரங்களுக்குள் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து விடும். கடந்த 2015-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு நகர இயக்கத் திட்டங்களை கோவை மாநகராட்சி வகுத்துவிட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்போது இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான செயலாக்க ஆய்வுகளை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதோடு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.ஐ.டி.இ.எஸ்.உடன் சேர்ந்து இரு நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது," என்றார்.