முகநூலில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட விவகாரம் : தி.வி.க. மாவட்ட செயலாளருக்கு ஜாமீன் மறுப்பு

கோவை : கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் கருத்து பதிவு விட்டதால், கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை : கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் கருத்து பதிவு விட்டதால், கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தனது முகநூலில் 'தில் இருந்தால் வா' என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் கடந்த 27-ம் தேதி நிர்மல் குமாரை கைது செய்தனர். இதில், நிர்மல் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டு நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிரியை வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்றும், புலன் விசாரணை பாதிக்கப்படும் என்றும் நீதிபதி ஞானசம்பந்தனிடம் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஞானசம்பந்தம், நிர்மல்குமார் தரப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...