திருப்பூர் : மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு திருப்பூரில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.
திருப்பூர் : மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு திருப்பூரில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

1869-ம் ஆண்டு பிறந்த மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக, மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட 11 இடங்களை தேர்வு செய்து சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்படுகிறது. அதில், தமிழக மேற்கு மண்டல தபால் துறையின் சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியடிகள் மற்றும் திருப்பூர் குமரனின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

இதனை தியாகி திருப்பூர் குமரனின் கொள்ளுப்பேரன் சதானந்தம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் முதலாவதாக வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் நான்கு தபால் தலைகள் மற்றும் மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.