வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கோலாகலம் : பவானி ஆற்றில் புனித நீராடி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் சுயம்புவாக அருள்பாலிக்கும் வன பத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் சுயம்புவாக அருள்பாலிக்கும் வன பத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

குண்டம் திருவிழா நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து, பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் 3 அடி உயரத்திற்கு பக்தர்கள் குண்டம் இறங்க பித்யேகமாக ஊஞ்ச மரக்கிளைகொண்டு தீ முட்டி குண்டம் தயார் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு கோவில் தலைமை பூசாரி பால், தயிர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.



இதனைத் தொடர்ந்து, தலைமை பூசாரி தண்டபானி முதலில் குண்டம் இறங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். பின்னர், பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக தீ குண்டம் இறங்கி அம்மனிடம் தங்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்.பி. தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...