பில்லிக்கொம்பை, கட்டபெட்டு கிராமங்களில் மதுபானக் கடைகளை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு

நீலகிரி : உதகை அருகே பில்லிக்கொம்பை மற்றும் கட்டபெட்டு கிராமங்களில் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : உதகை அருகே பில்லிக்கொம்பை மற்றும் கட்டபெட்டு கிராமங்களில் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



உதகை அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபானக் கடை உள்ளதால் பெண்கள் மட்டும் அல்லாமல், குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் பல இன்னல்களுக்கு ஆளாவதாக கிராம மக்கள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். மேலும், பிரதான சாலையில் மதுபானக் கடை உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பெண்களும் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை மேடாகக் காட்சி அளித்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குடிமகன்கள் சாலையிலேயே படுத்துக் கொள்வதாலும், பாட்டில்களை சாலையிலேயே உடைத்து செல்வதாலும், பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



மேலும், கிராம மக்களுக்கு எந்த இடையூறும் குடிமகன்களால் இல்லாதவாறு மாவட்ட ஆட்சியர் உடனடியாக இங்கிருந்து மாற்று இடத்திற்கு மதுபான கடையை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...