திருமுருகன் பூண்டியில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர் : உடைப்பை சரிசெய்வதில் அதிகாரிகள் அலட்சியப்போக்கு

திருப்பூர் : திருமுருகன் பூண்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில், குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் : திருமுருகன் பூண்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில், குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக 3-வது கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது, கோடைக்காலம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர், அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. ஆனால், இதுவரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த உடைப்பை சரிசெய்யவில்லை. இதனால், குடிநீர் சாக்கடையில் விழுந்து வீணாகி வருகிறது. அப்பகுதி மக்கள் குடங்களைக் கொண்டு வந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். 



மேலும், பலர் கேன்களை கொண்டு வந்து வீணாகி செல்லும் நீரை பிடித்து சென்ற வண்ணம் உள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் அலட்சியம் காட்டுவது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...