சிங்காநல்லூர் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு : குளத்தின் தன்மை கெட காவல்துறையினர் துணை நிற்கக் கூடாது எனவும் வலியுறுத்தல்

கோவை : சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நகர்புறத்தில் இருந்தாலும் மாசுபாடுகள் குறைந்து, சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கிறது. அதனை மேலும் சிறப்பாக்க மாநகராட்சியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முயன்று வருகின்றனர். இப்படி நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும் சிங்காநல்லூர் குளத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்காநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கரைக்க கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை, குளத்தின் பல்லுயிர் பாதுகாப்பு தன்மையை உணர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கைக்கிணங்க வேறு குளத்தில் கரைக்க கடந்த ஆண்டே வாய்மொழியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாநகர காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் ஒத்துழைத்தது.

இந்த சூழலில், இன்று காலை சிங்காநல்லூர் குளத்தில் இரண்டு காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவினர் இன்று விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான கள ஆய்வு மேற்கொண்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி குளத்தின் பாதுகாப்புத் தன்மை கெட்டுவிட காவல்துறையினர் ஒருபோதும் துணை போகக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...