திருப்பூரில் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

திருப்பூர் : திருப்பூரில் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் ஜீவா காலனி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜா முத்துக்குமார். இவர் இன்று தனது நண்பர்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள தனலட்சுமி மில் என்ற பகுதியில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். இந்த நிலையில், நீச்சல் தெரியாத நண்பர்கள் தண்ணீரில் இறங்காமல் மேலே நின்றிருக்க, ராஜா முத்துக்குமார் மட்டும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, தண்ணீருக்குள் சென்ற ராஜா முத்துக்குமார் அதிக நேரம் வெளிவராத நிலையில், பயந்துபோன அவரது நண்பர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் 



அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜா முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...