கோவை : வெள்ளலூர் குளத்தில் 128-வது வார களப்பணி குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கோவை : வெள்ளலூர் குளத்தில் 128-வது வார களப்பணி குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 28) இன்று வெள்ளலூர் குளத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 120 தன்னார்வலர்கள்பராமரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி இருந்தமையால் பணிகளை மூன்று குழுவாக பிரித்துக்கொண்டு களமிறங்கினர்.

ஒரு குழு மூன்றாவது மியாவாக்கி அடர்வனத்தில் உள்ள களை எடுத்து காய்ந்த இலை குப்பைகளை கொண்டு மூடாக்கிடும் பணி மேற்கொண்டனர். வருமான வரித்துறையினர் தொடங்கி வைத்த 159 மரக்கன்றுகள் நடும் பணி இன்று பராமரிக்க வேலியிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு முடிந்தது. மேலும், பேங்க் ஆப் பரோடா உதவியுடன் 72 மரக்கன்றுகள் நடும் பணியும் தன்னார்வலர்களால் இன்று செய்து முடிக்கப்பட்டது. சில தன்னார்வலர்கள் இணைந்து உரக் குழி எடுத்து சந்தையிலிருந்து கொண்டு வரப்பட்ட காய்கறி கழிவுகளை கொட்டி உர தயாரிக்கும் பணி செய்தனர்.

அடுத்த வாரமும் களப்பணி வெள்ளலூர் குளத்தில் செய்வது என முடிவு செய்யப்பட்டு களப்பணி முடிவுபெற்றது.


கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 28) இன்று வெள்ளலூர் குளத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 120 தன்னார்வலர்கள்பராமரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி இருந்தமையால் பணிகளை மூன்று குழுவாக பிரித்துக்கொண்டு களமிறங்கினர்.

ஒரு குழு மூன்றாவது மியாவாக்கி அடர்வனத்தில் உள்ள களை எடுத்து காய்ந்த இலை குப்பைகளை கொண்டு மூடாக்கிடும் பணி மேற்கொண்டனர். வருமான வரித்துறையினர் தொடங்கி வைத்த 159 மரக்கன்றுகள் நடும் பணி இன்று பராமரிக்க வேலியிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு முடிந்தது. மேலும், பேங்க் ஆப் பரோடா உதவியுடன் 72 மரக்கன்றுகள் நடும் பணியும் தன்னார்வலர்களால் இன்று செய்து முடிக்கப்பட்டது. சில தன்னார்வலர்கள் இணைந்து உரக் குழி எடுத்து சந்தையிலிருந்து கொண்டு வரப்பட்ட காய்கறி கழிவுகளை கொட்டி உர தயாரிக்கும் பணி செய்தனர்.

அடுத்த வாரமும் களப்பணி வெள்ளலூர் குளத்தில் செய்வது என முடிவு செய்யப்பட்டு களப்பணி முடிவுபெற்றது.
