24 மணிநேர குடிநீர் திட்டம் குறித்து கோவை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

கோவை : 24 மணிநேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டப்பணிகள் குறித்து கோவை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : 24 மணிநேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டப்பணிகள் குறித்து கோவை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து போலீசார், மின்சார வாரியத் துறையினர், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், கோவை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, குழிகளைத் தோண்டி குழாய் பதிப்பதால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை எளிதில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 



இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி கூறுகையில், "குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக ஆர்.எஸ்.புரம் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். கேபிள்கள் மற்றும் மின்சார வாரியக் கேபிள்கள் என பல்வேறு கேபிள்களும், குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கு மத்தியில் எந்தவிதமாக சேதமும், பள்ளங்கள் தோண்டும் போது ஏற்படும் குழப்பங்களையும் தவிர்க்க அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இந்தப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் தற்போது அனைத்து துறை அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்," என்றார். 

இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சூயஸ் திட்ட வரைபடம் அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...