என்.ஐ.ஏ. சோதனை குறித்து சமூகவலைதளத்தில் விமர்சனம் : தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

கோவை : தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்.ஜ.ஏ. சோதனை குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதுமிக்க நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை : தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்.ஜ.ஏ. சோதனை குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதுமிக்க நபர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையை ஒட்டி, கடந்த வாரம் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அந்த சோதனையின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் துபாயில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட 14 பேரையும் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், அரசியல் நோக்கத்திற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த எம். தாஜ் (39) என்பவர் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாஜை கைது செய்துள்ளனர். 

இது குறித்து திருவாரூர் எஸ்.பி. எம். துரை கூறுகையில், "இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் தாஜிற்கு கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையை தவறுதலான கண்ணோட்டத்தில் சித்தரித்து கருத்து பதிவிட்டுள்ளார்," எனக் கூறினார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....