தொடர் மழையால் மீண்டும் பசுமைக்கு திரும்பியது முதுமலை : சாலையோர புற்களை உண்ணும் வனவிலங்குகளைக் கண்டு செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : தொடர் மழையின் காரணமாக முதுமலை பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பியுள்ளதால், சாலை ஓரத்தில் உள்ள பசும்புற்களை உண்பதற்காக வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நீலகிரி : தொடர் மழையின் காரணமாக முதுமலை பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பியுள்ளதால், சாலை ஓரத்தில் உள்ள பசும்புற்களை உண்பதற்காக வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் முதுமலைப் பகுதியில் அதிகமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக, இப்பகுதியில் கடந்த இரண்டு மாத காலமாக வறண்டு காணப்பட்ட வனங்களில் புற்கள் உள்ளிட்ட தாவரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும், வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் பசும்புற்களும் முளைத்துள்ளன. இந்த நிலையில், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்டவை கூட்டம், கூட்டமாக சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேய்ந்து வருகின்றன. 

கடந்த சில நாட்களாக வறட்சியினால் உணவைத் தேடி வனவிலங்குகள் சென்றதால். அவற்றைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். தற்போது, முதுமலையில் இருந்து கல்லட்டி வழியாக உதகை வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் வனவிலங்குகளை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....