திருப்பூர் : அரசின் இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூர் : அரசின் இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 2017-18, 2018-19 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் காலம் தாழ்த்துவதாகக் கூறி மறியலில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்காக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 2017-18, 2018-19 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் காலம் தாழ்த்துவதாகக் கூறி மறியலில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்காக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.