கோவை : மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்யும் பணிகளை மேட்டுப்பாளையம் பகுதியிலேயே மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்யும் பணிகளை மேட்டுப்பாளையம் பகுதியிலேயே மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள 15 கிலோ மீட்டருக்கு உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ. 100 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுமார் 16 அடி வரை ஏற்கனவே இருந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமையான மரங்கள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு வெட்டப்பட்டு வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனை வெட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 50-க்கும் பணியாளர்கள் வானுயர்ந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டுப்பாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை சாலையில் இரண்டு பகுதிகளிலும் பசுமை போர்த்தியது போல் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு வருவதால், சாலை முழுவதும் களையிழந்து காணப்படுவது இயற்கை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்வதுடன், அதனை மேட்டுப்பாளையத்திலேயே நடவு செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள 15 கிலோ மீட்டருக்கு உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ. 100 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுமார் 16 அடி வரை ஏற்கனவே இருந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமையான மரங்கள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு வெட்டப்பட்டு வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனை வெட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 50-க்கும் பணியாளர்கள் வானுயர்ந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டுப்பாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை சாலையில் இரண்டு பகுதிகளிலும் பசுமை போர்த்தியது போல் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு வருவதால், சாலை முழுவதும் களையிழந்து காணப்படுவது இயற்கை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்வதுடன், அதனை மேட்டுப்பாளையத்திலேயே நடவு செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.