கோவை : கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை : கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல் புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது தலா 25,000 ரூபாய் பணமும், விருதுச் சான்றிதழும் அடங்கியது. புனைவு நூல்களுக்கான பிரிவில் கற்றாழைப்பச்சை நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் “தமிழ் இலக்கிய வரலாறு " நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் “விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி” கவிதைத் தொகுப்பிற்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல் புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது தலா 25,000 ரூபாய் பணமும், விருதுச் சான்றிதழும் அடங்கியது. புனைவு நூல்களுக்கான பிரிவில் கற்றாழைப்பச்சை நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் “தமிழ் இலக்கிய வரலாறு " நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் “விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி” கவிதைத் தொகுப்பிற்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.