மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை தீவிரம் : பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி வரை உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி வரை உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் அதிகரித்து பாலக்காடு மற்றும் அதன் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பரளி உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரும் பில்லூர் அணையை வந்தடைகிறது. இதனால், இன்று காலை நிலவரப்படி 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் 87 அடியாக இருந்த நிலையில், இரவு 91.50 அடியாக உயர்ந்து ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 4 அடிக்கும் மேல் உயர்ந்தது. 



இதனையடுத்து, அணையில் இருந்து மின் தேவைக்காக பில்லூர் அனையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருவதால், அணையின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அணைக்கான நீர்வரத்து 700 கன அடியாக உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...