கோவை : இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விவசாய நிலத்தில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை : இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் ஏர்கிராப்ட் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் கழன்று விவசாய நிலத்தில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவை அடுத்த இருகூர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழன்று, பீளமேடு - சூலூர் செல்லும் சாலையில் உள்ள நந்தகுமார் (34) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்தது.

இதில், பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி சுமார் 3 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது. மேலும், அதனுடைய பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள், வெடித்த விமானத்தின் பாகங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பெட்ரோல் டேங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், பாதுகாப்பைக் கருதி அதனைக் கழற்றி கீழே விட்டுள்ளதாக விமான பயிற்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.