வடவள்ளியில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட ம.மு.கூ.யினர் நேற்றிரவு விடுவிப்பு

கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் நேற்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவு விடுவிக்கப்பட்டனர்.

கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் நேற்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவு விடுவிக்கப்பட்டனர். 



சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து தடையை மீறி வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவரும், பி.என்.புதூர் தி.மு.க. பகுதி கழக பொறுப்பாளருமான வ.ம. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியைக் கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



மேலும், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகக் கூறிய அவர்கள், வடவள்ளியில் போதிய அளவிலான தண்ணீர் இருந்தும், அதனை குடியிருப்புகளுக்கு விநியோகிக்காமல், தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர். இதனால், வடவள்ளி பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் காலிக்குடங்களுடன் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், மருதமலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவு வரை சிறைப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் உள்பட 200 பேரும் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...