கோவை : வால்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 54 வயதுடைய எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : வால்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 54 வயதுடைய எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையில் உள்ள குரங்குமுடி பகுதியில் அமைந்துள்ள சிவா காஃபி எஸ்டேட்டில் செல்வராஜ் (54) இரவு காவலராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் இருந்து பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், திங்கட்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செல்வராஜை தேடிச் சென்றனர். அப்போது, குரங்குமுடி சாலையில் உயிரிழந்த நிலையில் செல்வராஜ் சடலமாகக் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் காட்டு யானை தாக்கி செல்வராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


வால்பாறையில் உள்ள குரங்குமுடி பகுதியில் அமைந்துள்ள சிவா காஃபி எஸ்டேட்டில் செல்வராஜ் (54) இரவு காவலராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் இருந்து பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், திங்கட்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செல்வராஜை தேடிச் சென்றனர். அப்போது, குரங்குமுடி சாலையில் உயிரிழந்த நிலையில் செல்வராஜ் சடலமாகக் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் காட்டு யானை தாக்கி செல்வராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
