நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.
நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான மலைத்தொடராக இருந்து வரும் நிலையில், அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள், பறவைகள், நீர் உற்பத்தி ஆகும் மிக முக்கிய மலைத்தொடராகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், அரிய வகை மரங்களை நடவு செய்தும், பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசுகையில், "நீலகிரி மாவட்டம் உயிர்ச்சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வரும்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான மலைத்தொடராக இருந்து வரும் நிலையில், அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள், பறவைகள், நீர் உற்பத்தி ஆகும் மிக முக்கிய மலைத்தொடராகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், அரிய வகை மரங்களை நடவு செய்தும், பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசுகையில், "நீலகிரி மாவட்டம் உயிர்ச்சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வரும்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.