நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் : நடிகர் விவேக் வேண்டுகோள்

நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.

நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார். 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான மலைத்தொடராக இருந்து வரும் நிலையில், அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள், பறவைகள், நீர் உற்பத்தி ஆகும் மிக முக்கிய மலைத்தொடராகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.



இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், அரிய வகை மரங்களை நடவு செய்தும், பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசுகையில், "நீலகிரி மாவட்டம் உயிர்ச்சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வரும்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...