மேட்டுப்பாளையத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டிய சிறுமி உயிரிழப்பு : பெற்றோருக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 27-ம் தேதி மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வர்ஷினி பிரியாவும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். இதில், காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.



இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்ய வேண்டும். மேற்கு மண்டலத்தில் உடுமலை சங்கர், கோகுல்ராஜ் படுகொலை உள்ளிட்ட இது போன்ற பல ஆணவப்படுகொலை சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போன்று சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தனி சட்டபிரிவு துவங்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பினை மாநில அரசு மற்றும் காவல்துறை பின்பற்றவில்லை. ஆகவே, உடனடியாக பின்பற்ற வேண்டும், இவ்வாறு கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...