மேட்டுப்பாளையத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டியதில் சிறுமி உயிரிழப்பு : கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மறுப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகள் மீது நடந்த கொலை வெறி தாக்குதலில் காதலன் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆபத்தான சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷினி ப்ரியாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த நிலையில், கனகராஜ் அண்ணன் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் கொலைக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் ஆகியோர் கைது செய்யப்படவில்லை என புகார் தெரிவித்த பெற்றோர்கள், அவர்கள் 3 பேரையும் கைது செய்யும் வரை வர்ஷினி பிரியாவின் உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வினோத்திற்கு தூக்கு தண்டனையும் உடனிருந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...