கோவை : சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோவையில் சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோவையில் சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போதிய மழை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.(எம்) சார்பில் சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போதிய மழை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.(எம்) சார்பில் சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.