நீலகிரி : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக எனக் கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவுள்ளதாக அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி.ரஜிதா தெரிவித்துள்ளார்.
நீலகிரி : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக எனக் கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவுள்ளதாக அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி.ரஜிதா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களை கடந்த ஒரு வாரகாலமாக ஆய்வு செய்த அதிவிரைவுப்படையினர் இன்று தங்களது ஆய்வினை முடித்து விட்டு கோவை திரும்பினர். இந்த ஆய்வு குறித்து அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி. ரஜிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிவிரைவுப்படை (ஆர்.எ.எப்) மத்திய சேமக் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்.) ஒரு அங்கமாகும். 105 ஆர்.எ.அப். முகாம் கோவை மகாலிங்கபுரத்தில் உள்ளது. மேலும், மக்களிடையே அச்சத்தை போக்கவும், சட்ட விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை, குன்னூர், தேவாலா மற்றும் உதகை ஊரக பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தோம்.

இங்குள்ள இளைஞர் சங்கங்கள், அமைதிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதோடு, காவல்துறை கண்காணிப்பாளர் தெ. ஷண்முகப்பிரியாவையும் சந்தித்து அண்மையில் மாவட்டத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதா..? என விவாதித்தோம். அதிவிரைவு படையினர் பதட்டமான மாவட்டங்களில் மாதம் இருமுறை முகாமிட்டு, கள நிலவரங்களை ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை வழங்க உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களை கடந்த ஒரு வாரகாலமாக ஆய்வு செய்த அதிவிரைவுப்படையினர் இன்று தங்களது ஆய்வினை முடித்து விட்டு கோவை திரும்பினர். இந்த ஆய்வு குறித்து அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி. ரஜிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிவிரைவுப்படை (ஆர்.எ.எப்) மத்திய சேமக் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்.) ஒரு அங்கமாகும். 105 ஆர்.எ.அப். முகாம் கோவை மகாலிங்கபுரத்தில் உள்ளது. மேலும், மக்களிடையே அச்சத்தை போக்கவும், சட்ட விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை, குன்னூர், தேவாலா மற்றும் உதகை ஊரக பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தோம்.

இங்குள்ள இளைஞர் சங்கங்கள், அமைதிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதோடு, காவல்துறை கண்காணிப்பாளர் தெ. ஷண்முகப்பிரியாவையும் சந்தித்து அண்மையில் மாவட்டத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதா..? என விவாதித்தோம். அதிவிரைவு படையினர் பதட்டமான மாவட்டங்களில் மாதம் இருமுறை முகாமிட்டு, கள நிலவரங்களை ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை வழங்க உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.