மருத்துவரை அவதூறாக நடத்தியதாக மீது வழக்கு : கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரிடம் 2 மணிநேர விசாரணைக்குப் பிறகு வழக்கு ஒத்திவைப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. 

கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றியதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த்தியதால், மீண்டும் தன்னை அவசர பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றுள்ளார். 

ஆனால், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரை நியமித்துள்ளார். இதனால், கடந்த 8 மாதமாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந்துள்ளார். இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் இருதரப்பினரிடமும் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், இவ்வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பின்னர் விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கஜேந்திரன் கூறியதாவது ;- முதல்வர் அசோகன் என்னை இழிவுபடுத்தியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டார். மேலும், பணிக்கு முறையாக வரவில்லை என பொய்யாக புகாரளித்தார். எனது வருகை பதிவை அழித்துள்ளார்.

அசோகனின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். அசோகனின் தொந்தரவு காரணமாக பல மருத்துவர்கள் பணியில் இருந்து விலகி சென்றுள்ளனர், எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகனிடம் விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "மருத்துவமனையில் யாரை எங்கு பணியமர்த்துவது என்பது நிர்வாகம் தொடர்பான விஷயம். விசாரணை தொடர்பாக பேட்டியளிக்க முடியாது," என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...