கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையில் கடந்த 13-ம் தேதி போத்தனூர் பகுதியை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான்,ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்காக முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரும் இன்று நீதிமன்றத்திற்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது, முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அனுமதி அளித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...