கோவை : கோவையில் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகேயுள்ள ஜம்புகண்டிபுதூர் பகுதியில் கடந்த 24-ம் தேதி மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதிய விபத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்தார். மனைவியின் உடலோடு மருத்துவர் ரமேஷ் பழங்குடியின மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த பகுதியில் இயங்கி வந்த மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், விபத்து ஏற்படுத்திய குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தனர் என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனை நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை காவல்துறை கண்காணிக்கவில்லை எனவும், குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கொளத்தூர் மணி குற்றம்சாட்டினர்.

பின்னர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கொளத்தூர் மணி கூறுகையில், "தனது மனைவி உயிரிழந்தும் மருத்துவர் ரமேஷ் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் மனைவியின் உடலை வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால், விபத்து ஏற்படுத்தியவர்கள் குறித்து தற்போது எங்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து ஏற்படுத்தியவர்கள் எங்கு இருக்கிறார்கள் யார் என்பது கூட தெரியவில்லை. அவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் ஏன் வெளியில் வரவில்லை," என கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகேயுள்ள ஜம்புகண்டிபுதூர் பகுதியில் கடந்த 24-ம் தேதி மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதிய விபத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்தார். மனைவியின் உடலோடு மருத்துவர் ரமேஷ் பழங்குடியின மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த பகுதியில் இயங்கி வந்த மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், விபத்து ஏற்படுத்திய குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தனர் என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனை நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை காவல்துறை கண்காணிக்கவில்லை எனவும், குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கொளத்தூர் மணி குற்றம்சாட்டினர்.

பின்னர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கொளத்தூர் மணி கூறுகையில், "தனது மனைவி உயிரிழந்தும் மருத்துவர் ரமேஷ் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் மனைவியின் உடலை வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால், விபத்து ஏற்படுத்தியவர்கள் குறித்து தற்போது எங்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து ஏற்படுத்தியவர்கள் எங்கு இருக்கிறார்கள் யார் என்பது கூட தெரியவில்லை. அவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் ஏன் வெளியில் வரவில்லை," என கேள்வி எழுப்பினார்.