தமிழகத்தை பிரதமர் மோடி புறக்கணிப்பது போன்ற மாயையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திருப்பூர் : பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிப்பது போன்ற மாயையை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் உருவாக்க முயற்சி செய்வதாக திருப்பூரில் நடந்த பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் : பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிப்பது போன்ற மாயையை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் உருவாக்க முயற்சி செய்வதாக திருப்பூரில் நடந்த பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

வருகின்ற ஜூலை 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது :- தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைந்ததால் மோடி தமிழகத்தை புறக்கணிப்பார் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் அரசியல் சாயம் பூசப் பார்க்கிறார்கள். அது தவறு, இந்த நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் மோடி கவனம் செலுத்தி வருகிறார். 



தேசிய அளவில் புதிதாக கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், மக்கள் அவர்களாகவே ஏற்காத வரை மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படாது. அதே சமயம், ஆக்கப்பூர்வமாகவும் இக்கல்விக் கொள்கை குறித்து அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வேண்டும். குடிநீருக்காக நாள் கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நீர் மேலாண்மை என்பது அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் பார்க்காமல் பொதுமக்களே முயற்சி செய்து நீர்நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளை பாதுகாத்தால் தான் இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும். நீர் மேலாண்மை குறித்து பள்ளிப் பருவத்திலேயே பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும், என கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...