நீலகிரி : போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தலைமையில் உதகையில் பேரணி நடைபெற்றது.
நீலகிரி : போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தலைமையில் உதகையில் பேரணி நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருட்களை அறவே ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பி முக்கிய சாலைகள் வழியாக அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்ட போதை விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த போதை விழிப்புணர்வு படங்களை மாணவ, மாணவிகள் பார்த்து சென்றனர்.
பின்பு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான குறும்படமும், போதைக்கு அடிமையாகக் கூடாது என்பதன் குறும்படமும் திரையிடப்பட்டது. இதில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த குறும்படங்களை விழிப்புணர்வு நோக்கத்துடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருட்களை அறவே ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பி முக்கிய சாலைகள் வழியாக அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்ட போதை விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த போதை விழிப்புணர்வு படங்களை மாணவ, மாணவிகள் பார்த்து சென்றனர்.
பின்பு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான குறும்படமும், போதைக்கு அடிமையாகக் கூடாது என்பதன் குறும்படமும் திரையிடப்பட்டது. இதில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த குறும்படங்களை விழிப்புணர்வு நோக்கத்துடன் கண்டு ரசித்தனர்.