கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பேரில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஆகியோரை கைது செய்யப்பட்டனர். மேலும், கோவையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஷாஜகான், ஹபியுபுல்லா மற்றும் முகமது உசேன் ஆகியோரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் காவல்துறையினர் சார்பில் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மூவரையும் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...